பாத்ரூ(ம்)பூதம் (டாக்டர் இல்லங்க) (A)
மாத்ருபூதம் கேள்விப்பட்டிருப்பீங்க.. அதென்ன ”பாத்ரூம்பூதம்?” இவரும் அவர மாதிரியே “அந்த” டாக்டரோ? பேர் வித்தியாசமா இருக்கே? ஒரு வேளை “அந்த” டாக்டருங்கறாதல “அடையாள”ப்பேரா இருக்குமோ? அடையாளமா இருந்தாலும் பாத்ரூமுக்கு என்ன சம்மந்தம்? என்னங்க ...? பேச்சிலர் பாத்ரூமா? ஒஹோ ...இருந்தாலும் இப்படியெல்லாமா பேர வச்சிப்பாங்க? என்ன இப்படியெல்லாம் பலரும் பல விதமா மண்டைய உடைச்சிக்கிட்டிருக்கீங்களா? நீங்க நினைக்கற மாதிரி எதுவும் இல்லங்க.. நம்ம ஃப்ரெண்டொட 2 வயசு பொண்னு வீட்டுக்கு வந்திருந்தப்போ இருட்டுல பாத்ரூம் போக பயந்துக்கிட்டு “பாத்ரூம்ல பூதம்”னு மழலையில சொன்னதுதாங்க இது.. முதல்ல நானும் உங்கள மாதிரிதாங்க குழம்புனேன், அப்புறம்தான் புரிஞ்சுது..
அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்?
இருக்கு.. சொல்றேன்..கேளுங்க...(என்னப்பா நம்ம ட்ரூப்ல எல்லாரும் ரெடியா? “ரெடி சார்..” அப்ப ஒன்.. டூ.. த்ரீ.. ஸ்டார்ட்..)
அதாவதுங்க நம்ம நாட்டுலே படிச்சவன், படிக்காதவன்(படம் இல்லப்பா), பாமரன் இன்னும் பல பேர் இந்த விஷயத்துலே தெளிவான அறிவில்லாமத்தான் இருக்காங்க.. எந்த விஷயத்துல? அதாங்க “அந்த” விஷயத்துல..
“யோவ் தெளிவு இல்லாமலா நாம உலத்துலயே ரெண்டாவது இடத்துல இருக்கோம்?”
ரெண்டாவது இடத்துக்கு வரக்காரணமே தெளிவு இல்லாததுதான்..புரியுதா..? சித்த நாழி சு(ழிய) வச்சிட்டு சும்மா இருக்கியாடா தம்பி? எல்லா ஊர்லயும் மூத்திர சந்துல பத்திரமா ஒளிஞ்சுக்கிட்டு ஓஹோன்னு யாவாரம் பாத்துக்கிட்டு இருக்கற டாக்டர்களயும் அவங்க பக்கம் பக்கமா கொடுக்கிற விளம்பரத்த பாத்து, அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம, களத்து மேட்ல குத்த வச்சவன்லேருந்து, ஃபில்டர் சிகரெட் பத்த வைக்கறவன் வரைக்கும், செட்டியார்ட்டயோ, சேட்டுக்கிட்டயோ சொத்த வச்சிட்டு மொத்தமா ஏமாந்த கதையையும்தான் நாம இப்ப பாக்கப்போறோம்..
உங்களுக்கு தெரியுமா? இந்த விஷயத்துக்காக உலகெங்கும் ஒர் ஆண்டுக்கு மனிதர்கள் செலவழிக்கும் தொகை எவ்வளவென்று? (டாக்டருக்கும், மருந்துக்கும்(மற்ற செலவுகள் சேர்க்காமல்) சில ஆயிரம் கோடிகள்... வாயப்பொளக்காதீங்க... பதிவு கொஞ்சம் சென்சிடிவ் மேட்டர்ங்கறாதல எதாவது அசம்பாவிதம் நடந்தா நான் பொருப்பல்ல....
டவுசர் டாக்டரோட பூசனிக்கீரை ஸ்பெஷல், பிரபல பொறனி கோ.கோழிகுத்து, ஆந்திர அடிவேறு வைத்தியர் மற்றும் எனக்கு பெயர் தெரியாத மேலும் பல பிரபலங்கள்... அப்புறமா எந்தக்கட்டுப்பாடும் இல்லாம நீட்டா(neat-ஆ (கரெக்டா படிச்சீங்கள்ல?) விக்கற இங்க்லீஷ் மருந்துகள் ...
இந்த மாதிரி போலி டாக்டர்கள், கண்ட வீரிய மருந்தயும் கொடுத்து இருக்கற கொஞ்ச “நஞ்சையும்”(புரிஞ்சுதா?) எடுத்து வீரியம் என்ன விஷயமே இல்லாம ஆக்கிடறானுவ.. இதனால என்னாச்சுன்னா ஏகப்பட்ட குடும்பத்துல குத்து, வெட்டு, குடும்பகோர்ட், கேஸ்னு ஆகிப்போச்சு.. அது மட்டுமல்ல .. அரச மரம், ஆல மரம், வேப்ப மரம்னு சிம்பிளா மரத்த சுத்தி வந்து மாங்கா தின்னலாம்னு மட மரமா திரிஞ்ச மாதர்குலத்தை கரெக்டா கரெக்ட் பன்னி, அவங்க வயித்துல புள்ள குட்டிக்கு பதிலா நெசமாவே புழு, பூச்சி நெளிய வச்சானுவ , பிச்சக்காரனுக்கு பொறந்தவனுங்க...
பஜார்ல கிடைக்கிற நிஜார அவுக்கற சீப்பான படத்தலாம் கும்பலா கூடி கும்பமேளாவவா பாத்து, அத உண்மைன்னே நம்பி கற்பனை குதிரைய கன்னா பின்னான்னு ஓட விட்டுட்டு கடேசில இளைஞர்களும் இங்கேதான் வர்றாங்க...குமரன்s/oமகாலஷ்மி படத்துல. “துவண்டு கிடந்த பிஸினஸ்ச செங்குத்தா தூக்கி நிறுத்திட்டன்னு” நடிகர் வெ.ஆ.மூர்த்தி சொன்னது மாதிரி, இந்த ஃப்ராடுங்க தனக்கும் செய்வாங்கன்னு நம்பி. ஆனா இந்த போலிங்க கருங்குரங்கு கஷாயம், குட்டிக்குருவி லேகியம், மயில் தோகை ஆயில், கடா ஆடு பேஸ்ட்டுனு எதாவத வர்ற கஸ்டமர் இடுப்புல கட்டி அனுப்பிடுவாங்க...
அவ்வளவுதான் மருந்துங்கற பேர்ல போலிங்ககிட்ட வாங்குன கஸ்மாலத்த உள்ளுக்க தள்ளிட்டும் வெளிய தடவிக்கிட்டும் பப்பரப்பான்னு மல்லாக்க படுத்துக்கறாங்க.. நம்பாளுங்க. இதுல ’நான் அவனில்லை’ கதாநாயகன் மாதிரி 5.1 (dts இல்ல) கனவு வேற... விடிய விடிய குனிஞ்சே (நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் ப்ளீஸ்..) பாத்துக்கிட்டுருந்ததுல கழுத்து வலிதான் மிச்சம். முடிவு என்ன ஆகும்? எதிர்காலத்துல 1க்கு மட்டும்தான் போலாம், வேற 1க்குள்ளயும் போக முடியாத மாதிரி ஆயிடும்.
மாமியார், நாத்தனார், கொழுந்தனார்னு பல பேரு மருமகள மகளா நினைக்காம ”இன்னுமான்னு?” நக்கலா கேக்கற கேள்வினால அவசரப்பட்டு போலிங்ககிட்ட வர்ற பொண்னுங்கள ”கர்ப்பப்பைல அழுக்கு” இந்த மருந்த ஒரு மண்டலம் சாப்புடுங்கன்னு ஏதோ மஞ்சப்பைய அழுக்கெடுக்கறாப்புல சுலபமா அவங்க ஏக்கத்த பயன்படுத்தி பணத்த புடுங்கிடுவாங்க போக்கத்த பசங்க..
இவனுங்க மட்டும் இல்லங்க, மொட்ட தலையில முடி வளக்கிறேன், மூலம் வந்தவன கூலாக்கறேன்ன்னு இன்னும் பல பேர் பல வகையிலே மக்களையும் சமுதாயத்தையும் நல்லா ஏமாத்திக்கிட்டு இருக்காங்க. அதுலயும் இந்த ”அபார்ஷன் ஸ்பெஷலிஸ்ட்”னு ஒரு கோஷ்டி அபார்ஷன்னா ஆம்லெட் போடறதுங்கற மாதிரி ஏகப்பட்ட இளம் பெண்களோட வாழ்க்கையில விளையாடிட்டு இருக்கானுங்க..
இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?
இருக்கு. எல்லாரும் எல்லாருக்கும் முடிஞ்ச வரைக்கும் விழிப்புனர்வு வரவழைக்கற வகையில தெளிவான கருத்துக்களை பரப்புங்க. நல்ல ஆரோக்யமான , காய்கறிகள் நிறைந்த, சத்தான உணவுகள எடுத்துக்குங்க. இன்றைய இளைய சமுதாயத்தினர் பலர் ”குடிக்க ஒரு பீரு
சாப்புட கொஞ்சம் சோறு
பாக்க ஒரு படம்
படுக்க சின்ன இடம்”னு
தவறான சந்தங்களோடு வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. ஆகையால், குடி, பொடி, பீடி, லேடி(யுமா?) போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாமல் வாழ பழகுங்கள். எப்போ யாருக்கு என்ன பிரச்சனைன்னாலும் நல்ல மருத்துவரை அனுகுங்க.. சந்தேகங்கள தயக்கமில்லாம கேளுங்க.. நீங்களே டாக்டரா மாறி சொந்தமா கடா மார்க் லேகியம், காட்டெருமை கோமியம்னு வாங்கி சாப்புடாம மருத்துவர் அறிவுரைப்படி மட்டுமே மருந்துகள உட்கொள்ளவும். விழிப்புணர்வு இல்லாம மீறினா, கடேசில பின் விளைவா முன் விளைவே இல்லாம போய்டும் ஜாக்கிரதை. இன்றைய கால கட்டத்துல நவீன மருத்துவம் மிக பிரமாண்டமாய் வளர்ந்துள்ளது. நாம் போலி மருத்துவர்களிடத்தில் போகும் பிரச்சனைகளெல்லாம் மிக சாதாரண ஒன்றுதான் தற்கால மருத்துவ வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்க்கும்போது... செலவுகள் அதிகமென்று சிக்கனத்திற்காக உங்கள் வாழ்க்கையை பனயம் வைக்காதீர்கள்.. எல்லாம் சரி ஏன் இவனுங்கள அரசாங்கம் நெனச்சா கட்டுப்படுத்தலாமேன்னு சொல்றீங்களா? அப்ப உங்களுக்கு அரசியல் தெரியாதுன்னு அர்த்தம். மேலும், மருத்துவ பதிவுல அரசியல் வேண்டாம்.. ப்ளீஸ் ஓக்கே?
மகா ஜனங்களே.. இத பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்.. வழக்கம் போல கருத்து மழையா, காட்டாற்று வெள்ளமா பொங்கிட்டு போங்க..
(ஆண்குறி, ஆச்சர்யக்குறின்னு பதிவுலகத்துலயும், பத்திரிக்கையுலகத்துலயும் கவிதை, கட்டுரைன்னு கலக்குறவங்க இந்த பக்கத்துலயும் எதாவது சொன்னா அது விழிப்புனர்வ ஏற்படுத்தற முயற்சிக்கு பெரிய அளவுல உதவுறா மாதிரி சந்தோஷமான விஷயம்னு நெனைக்கறேன்)
அது மட்டுமல்ல எல்லாரும், வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாம வாக்குகள அள்ளி வீசுற வாக்காளர்கள் மாதிரி, ஓட்டுக்கள ’வார்ட்’ புயல் கணக்கா வாரி கொட்டுங்க....
அப்ப, மீண்டும் ஒரு அட்டகாசமான தருனத்தில் சந்திப்போமா?